search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செத்து மிதக்கும் மீன்கள்"

    • தமிழகத்தின் சுவையான நீர் என பெயர் பெற்ற இந்த கொட்டக்குடி நீரானது மீனாட்சிபுரம் கண்மாய்க்கு செல்லும்போது போடி பகுதியில் உள்ள கழிவு நீர் அனைத்தும் கலந்து செல்வதால் மாசடைந்து செல்கிறது.
    • இந்த மீனாட்சிபுரம் கண்மாய்க்கு பல ஆயிரம் மைல்கள் கடந்து வெளிநாட்டு பறவைகள் இரை தேடி வருவது வழக்கம்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய கண்மாய் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை கொட்டக்குடி ஆறு, அணை பிள்ளையார் அணைக்கட்டு ராஜ வாய்க்கால் மூலம் இந்த கண்மாய்க்கு நீர்வரத்து வருகிறது. இந்த கண்மாயை நம்பி 6000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.

    தற்போது தென்மேற்கு பருவமழை காலத்தில் குறைந்த அளவிலான மழை பெய்ததால் கொட்டக்குடி ஆற்றில் நீர் வரத்து குறைந்து கண்மாய் வறண்டு போகும் நிலையில் உள்ளது.

    தமிழகத்தின் சுவையான நீர் என பெயர் பெற்ற இந்த கொட்டக்குடி நீரானது மீனாட்சிபுரம் கண்மாய்க்கு செல்லும்போது போடி பகுதியில் உள்ள கழிவு நீர் அனைத்தும் கலந்து செல்வதால் மாசடைந்து செல்கிறது. இதன் காரணமாக கண்மாயில் மீன்கள் அனைத்தும் டன் கணக்கில் செத்து கரை ஒதுங்கி உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நீர் அனைத்தும் மாசடைந்து காணப்படுகிறது.

    இந்த மீனாட்சிபுரம் கண்மாய்க்கு பல ஆயிரம் மைல்கள் கடந்து வெளிநாட்டு பறவைகள் இரை தேடி வருவது வழக்கம். தற்போது மீன்கள் அனைத்தும் செத்து கரை ஒதுங்கியதால் ஏமாற்ற த்துடன் திரும்பிச் செல்கி ன்றது.

    இதே நிலை தொடர்ந்தால் வரும் காலங்களில் இந்த கண்மாயில் மீன்களே கிடைக்காத நிலை உருவாகும். மாவட்ட நிர்வாகம் கழிவுநீர் ராஜ வாய்க்காலில் கலக்காதபடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.

    • நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, மோகனூர் மெயின் ரோட்டில், கொண்டிசெட்டிப்பட்டி குளம் அமைந்துள்ளது.
    • சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதக் கின்றன.மீன்கள் செத்து மிதப்பதாலும், கழிவுநீர் கலப்பதாலும், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, மோகனூர் மெயின் ரோட்டில், கொண்டிசெட்டிப்பட்டி குளம் அமைந்துள்ளது. சுமார் 17.5 ஏக்கள் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளம், கடந்த 2015–-20ம் ஆண்டுகளில், பொது மக்கள் பங்களிப்புடன் சீரமைக்கப்பட்டு, பூங்கா மற்றும் குழந்தைகள் விளையாட்டு வசதிகள் அமைக்கப்பட்டு, குளத்தை சுற்றியும் பாதை அமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

    அதையடுத்து, டெண்டர் விடப்பட்டு, குளத்தில் ஜிலேபி, கெண்டை, கெளுத்தி, கட்லா உள்ளிட்ட மீன் வகைகள், வாத்துகள் ஆகியவை விடப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெய்த கனமழையால், இந்த குளம் நிரம்பி, தற்போதும் சுமார் 90 சதவீத கொள்ளளவிற்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக, சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    மேலும், தற்போது, நாமக்கல் எம்.எல்.ஏ ராமலிங்கம் ஏற்பாட்டின் பேரில் குளக்கரையில் பேவர் பிளாக் நடைபாதை அமைக்கப்பட்டு, காலையும், மாலையும் ஏராளமான ஆண்களும், பெண்களும் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்ற னர். இந்தநிலையில், கொண்டிசெட்டிப்பட்டி, பெரியப்பட்டி, கே.கே.நகர், முல்லை நகர், சிங்கிலிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், சாக்கடை வழியாக குளத்தில் கலக்கிறது. அத னால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதக் கின்றன.மீன்கள் செத்து மிதப்பதாலும், கழிவுநீர் கலப்பதாலும், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அதனால், குளத்தின் அருகே வசிக்கும் பொதுமக்கள் சுவசிக்க முடியாமல் கஷ்ட்டபட்டு வருகிறாகள்.

    இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன், கழிவுநீர் கலந்ததால், ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. அவற்றை நகராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுகாதார சீர்கேட்டையும், மக்களின் நிலையையும் கருத்தில் கொண்டு, குளத்தில், கழிவு நீர் கலப்பதை தடுக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    ×